பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது 300 எபிசோடுகள் கடந்துள்ள நிலையில் அதன் கொண்டாட்ட விழாவின் ப்ரோமோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. எழிலின் நிஜ அம்மாவும் இதில் கலந்துகொள்ள இந்த ப்ரோமோ அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியல் விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. அம்மா மகனின் பாசத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட சீரியல் என்பதால் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பாக்கியாவை தொடர்ந்து ஏமாற்றி வரும் கோபி எப்பொழுது சிக்க போகிறார் என்று தெரியவில்லை.
மேலும் எழில் எத்தனை தடவை சொல்லியும் கோபி ராதிகா பின்னால் தான் சுற்றி வருகிறார். இந்த சீரியல் ஆரம்பித்து சில நாட்களிலேயே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கே டப் கொடுத்து வருகிறது.
இப்பொழுது வெளியான டாப் சீரியல் லிஸ்ட்டில் கூட பாக்கியலட்சுமி 2வது இடத்திற்கு முன்னேறி இருந்தது. இப்படி இருக்க 300 எபிசோடுகளை கடந்து சாதனை செய்துள்ள பாக்கியலட்சுமி சீரியல் கொண்டாடட்டம் விநாயகர் சதுர்த்தி அன்றைக்கு வெளியாகவுள்ளது.
அந்த ப்ரோமோ இப்பொழுது வைரலாகி வருகிறது. அனைவருக்குமே எழில் என்றால் மிகவும் பிடிக்கும். அந்த வகையில் தற்போது எழிலின் அம்மா எதிர்பாராத விதமாக செட்டுக்கு வருகிறார். இதனை பார்த்த எழில் கண்கலங்குகிறார். இத்தனை நாள் என்ன பத்தின கம்பளைண்ட்க்கு மட்டும் தான் அம்மா வந்து இருக்காங்க.
View this post on Instagram
ஆனால் இப்போ பெருமை படக்கூடிய விதமாக இன்னைக்கு தான் அவங்களை இங்க கூப்டுருக்கிங்க என்று சொல்லி கண்கலங்குகிறார். ரீல் அம்மாவும் ரியல் அம்மாவும் இணைந்து அவருக்கு முத்தம் கொடுக்க அது பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்