விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தவர் தான் ஐஷு. குறைந்த வாக்குகளை பெற்று கடந்த வாரம் மக்களால் வெளியேற்றப்படிருந்த இவர் மக்களிடம் மன்னிப்பு கேட்டவாறு போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதாவது இந்த நிகழ்ச்சியின் பார்வையாளர்கள் அனைவருக்கும் என்னுடைய மன்னிப்பு தெரிவித்துக் கொள்கிறேன். பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் நடந்துகொண்ட விதத்தை நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன்.
Enewz Tamil WhatsApp Channel
மேலும் நான் தவறான பாதையில் செல்லும் போது என்னை காப்பாற்ற முயன்ற யுகேந்திரன், பிரதீப், அர்ச்சனா ஆகியோர் என்னை மன்னித்து விடுங்கள். கோபம், காதல், பொறாமை, தவறான நட்பு வட்டாரங்கள் தான் என்னுடைய கண்மூடித்தனமான செயலுக்கு காரணமாக அமைந்தது. மேலும் நான் செய்த தவறுக்கு என் மீது மட்டும் உங்கள் கோபங்களை காட்டுங்கள். என் பெற்றோரை விட்டு விடுங்கள். நான் என் உயிரை விடவும் முடிவு எடுத்து விட்டேன். ஆனால் என் பெற்றோரின் மீது நான் வைத்திருக்கும் நம்பிக்கை தான் இன்னும் என்னை உயிரோடு வைத்திருக்கிறது என உருக்கமாக பதிவிட்டு மக்களிடம் மன்னிப்பை கேட்டுள்ளார்.
அரசு பள்ளியில் நீங்கள் ஆசிரியராக வேண்டுமா?? அப்போ இதுக்கு முதல்ல APPLY பண்ணுங்க!!