ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டி கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி நடைபெற்றது. ஆனால் இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் இந்திய அணி 10 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணிக்கு டிக்ளேர் செய்தது. இதையடுத்து மீண்டும் இந்தியா பாகிஸ்தான் அணி மோதும் சூப்பர் 4 சுற்று நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் நிச்சியம் இறுதிப் போட்டிக்கு செல்லும்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதனால் இந்த போட்டியை எதிர்நோக்கி இந்திய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில் இந்த போட்டி மழையால் தடைப்பட அதிக வாய்ப்பு உள்ளது என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இந்தியா பாகிஸ்தான் மோதும் சூப்பர் 4 ஆட்டம் மழையால் தடைபட்டாலும் மீண்டும் மறுநாள் தொடரும் என தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
உலக கோப்பையின் கோல்டன் டிக்கெட்…, இந்திய கிரிக்கெட் ஜாம்பவானுக்கு வழங்கி பிசிசிஐ கவுரவம்!!