IPL தொடரின் 17வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இது ஒரு புறம் இருந்தாலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு, நாளுக்கு நாள் சர்ச்சை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது இது தொடர்பாக இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓர் முக்கிய கருத்தை கூறியுள்ளார். அதில், FAN WAR என்பது இந்தியாவில் மிகவும் அசிங்கமான நிலைக்கு செல்கிறது.
ஆஸ்திரேலியாவில், இங்கிலாந்தில் சொந்த அணி வீரர்களின் ரசிகர்கள் சண்டை போட்டு நான் பார்த்ததில்லை. இந்தியாவில் மட்டும் இது நடக்கிறது. கங்குலி கேப்டன்சியின் கீழ் சச்சின் விளையாட வில்லையா? ராகுல் டிராவிட் கேப்டன்சியில் கங்குலி, சச்சின் விளையாட வில்லையா? தோனி கேப்டன்சியின் எல்லா கிரிக்கெட் ஜாம்பவான்களும் விளையாடினார்கள் என்று கூறி தனது கருத்தை முடித்துள்ளார். தற்போது இவரின் கருத்து சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
“பார்க்கிங் – 2” எப்போ ?? இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்.. குஷியில் ரசிகர்கள்!!