டெல்லி மதுபான ஊழல் வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தொடர்பு இருப்பதாக பலமுறை அவருக்கு அமலாக்கத் துறையினர் சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் பதில் அளிக்காததால் கடந்த மார்ச் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அமலாக்க துறையினர் கட்டுப்பாட்டில் இருக்கும் இவரது வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இதனால் அமலாக்கத்துறையினர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவலை 7 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஏப்ரல் 1ம் தேதி வரை அரவிந்த் கெஜ்ரிவாலின் காவலை நீட்டித்துள்ளனர்.