ஏன் எங்கள பார்த்த அவ்வளோ கேவலமா இருக்கா.., மேடையில் கண்ணீர் மல்க பேசிய தயாரிப்பாளர்!!

0
ஏன் எங்கள பார்த்த அவ்வளோ கேவலமா இருக்கா.., மேடையில் கண்ணீர் மல்க பேசிய தயாரிப்பாளர்!!
ஏன் எங்கள பார்த்த அவ்வளோ கேவலமா இருக்கா.., மேடையில் கண்ணீர் மல்க பேசிய தயாரிப்பாளர்!!

நடிகை சரண்யா பொன்வண்ணன் நடித்த படத்திற்கு அவர் ஆடியோ லாஞ்சுக்கு வராததை குறித்து பட தயாரிப்பாளர் கண்ணீர் மல்க பேசியது இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

நடிகை சரண்யா பொன்வண்ணன்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகை சரண்யா பொன்வண்ணன். இவர் கடைசியாக சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்திருந்தார். இதனை தொடர்ந்து சிலந்தி, ரணதந்த்ரா, நினைவெல்லாம் நீயடா ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன் படைப்பில் உருவான அருவா சண்டை படத்தில் ஹீரோவுக்கு அம்மாவாக நடித்துள்ளார் சரண்யா. இப்படம் வருகிற டிசம்பர் 30 தேதி திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் புரொமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனை தொடர்ந்து சமீபத்தில் சென்னையில் நடந்த ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் சரண்யாவை குறித்து படத் தயாரிப்பாளர் சில குற்ற சாட்டுகளை வைத்தார். அதாவது இந்த அருவா சண்டை திரைப்படத்தில் சரண்யாவை வைத்து தான் கதை ட்ராவலாகும். சொல்ல போனால் கதைக்கு அவங்க தான் உயிர் கொடுப்பாங்க. அதனால் ஆடியோ லான்ச் நிகழ்ச்சிக்கு வாங்க என்று காலில் விழாத குறையா கூறினேன். ஆனால் அவர் நான் கிறிஸ்துமஸ் விழாவில் கொஞ்சம் பிஸியாக இருக்கிறேன்.

லிப் லாக் கிஸ் கொடுத்து அதிர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட காஜல்.., ஷாக் புகைப்படம் வைரல்!!

அதனால என்னால வர முடியாது என்று கூறினார். இதே பெரிய ஹீரோக்கள் படம் என்றால் இந்த மாதிரி நடந்து கொள்வாரா என்று சரண்யாவை வெளுத்து வாங்கினார். மேலும் புது தயாரிப்பளர்களா ஏன் இப்படி நடத்துறீங்க, மேல வளரவிடாமல் மிதிக்கிறீங்க . ஏன் நாங்களா பெரியாளா வர கூடாதா, ஏன் நாங்க என்ன அவல கேவலமா போய்ட்டோமா என்று கண்ணீர் மல்க பேசினார். இந்த படத்தின் மூலம் தன்னோட மரியாதை கெடுத்துக் கொண்டார் என்று கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here