டெல்லி முதலமைச்சரும் “இந்தியா” கூட்டணியின் முக்கிய தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக, அமலாக்கத்துறை நேற்று (மார்ச் 21) கைது செய்துள்ளனர். கடந்த 2 மாதங்களில் கைது செய்யப்படும் இரண்டாவது முதலமைச்சர் என்பதால் எதிர்க்கட்சி உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடத்த “இந்தியா” கூட்டணி கட்சிகள் திட்டமிட்டு வருகிறது.
கங்குவா படத்தின் கதைக்களம் இதுதான்.. வெளியான மிரட்டல் அப்டேட்!!
இந்த சூழலில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலை, முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்துள்ளனர். அடுத்தடுத்து எதிர்க்கட்சி தலைவர்களை அமலாக்கத்துறை கைது செய்வது பலர் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.