நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் 13 முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பேருந்து பயணம் அதிகரிக்கும் என்பதால் தமிழக அரசு கோடை விடுமுறை கால சிறப்பு பஸ்களை இயக்கத் திட்டம் வைத்துள்ளது. அதாவது வரும் ஏப்ரல் 13ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதிலும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் கோடை காலம் என்பதால் குளிர்சாதன பேருந்துகள் அதிகளவில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.