தமிழகத்தில் இந்த பள்ளிகளுக்கு 8 ஆம் தேதி விடுமுறை.., தேர்வுகள் ஒத்திவைப்பா?? வெளியான அறிவிப்பு!!!

0

தமிழகத்தில் இப்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகளிலும் இறுதி கட்ட தேர்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் ஏப்ரல் 8ம் தேதி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக அந்த மாவட்ட முழுவதும் ஏப்ரல் 8ம் தேதி விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஏப்ரல் 13-ஆம் தேதி அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த நாளில் பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் நடத்த திட்டமிட்டு இருந்தால் அது ஒத்திவைக்க வாய்ப்பு இல்லை. மேலும் அன்றைய தினத்தில் தேர்வுகள் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here