தமிழகத்தில் 4 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு அட்டவணை, ரமலான் பண்டிகையை முன்னிட்டு மாற்றப்பட்டது. அதன்படி இன்றுடன் (ஏப்ரல் 5) கணிதம் தேர்வு முடிவடைந்த நிலையில், அடுத்ததாக 22ஆம் தேதி தான் அறிவியல் தேர்வு நடைபெற உள்ளது. இதனால் இதற்கிடையில் பள்ளி செயல்படுமா? என மாணவர்கள் பலரும் அச்சத்தில் இருந்தனர். இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
2024 IPL தொடரில் எந்த அணி முதலிடம்?? புள்ளி விவரங்களுடன் பட்டியல் இதோ!!
அதாவது பள்ளி ஆசிரியர்கள் பலரும் தேர்தல் பணிகளில் ஈடுபட இருப்பதால், 4 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 15 முதல் 19 ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்படுவதாக அறிவித்துள்ளனர். மேலும் ஏப்ரல் 22, 23ஆம் தேதி நேரடியாக தேர்வு எழுத மட்டும் பள்ளிகளுக்கு வரலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.