சமீபத்திய பொறியியல் தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. அதில் அதிர்ச்சிகரமான கல்லூரிகளில் மாணவர்கள் குறைந்த மதிப்பெண்களும் சில கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரவரிசை பட்டியல் வெளியீடு:
சமீபத்திய பொறியியல் மாணவர்கள் எழுதிய தேர்வுகளுக்கான தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் தனது அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிட்டது. அதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரிய வந்துள்ளது.
மெட்ரோ நிலையங்களுக்கு பெயர் மாற்றம் – முதல்வர் பழனிசாமி உத்தரவு!!
அதில், ஏராளமான கல்லூரில் மாணவர்கள் 20 சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சி பெற்றுஇருப்பது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் கேள்வியை ஏற்படுத்தி உள்ளது.
என்ன காரணம்:
அதில், மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக ஒரு மாணவர் கூட 2 கல்லூரிகளில் தேர்ச்சிபெறவில்லை, மேலும் சில கல்லூரிகளை 20 சதவீத தேர்ச்சி மட்டுமே பெற்று உள்ளனர், மாணவர்கள். 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற கல்லூரிகள் 2 தான் என்றும் கூறப்படுகிறது.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
இதற்கு, காரணங்களாக போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது, தரமான ஆசிரியர்கள் இல்லாதது, மாணவர்களுக்கு கற்றலுக்கு ஏற்ற உபகரணங்கள் இல்லாதது போன்றவைகளே காரணம் என்று கூறப்படுகிறது.