தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகங்களில் பயிலும் பொறியியல் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அண்மையில் தெரிவித்து இருந்தனர். இந்த கட்டண உயர்வுக்கு அண்ணா. பல்கலை சிண்டிகேட்-டும் ஒப்புதல் அளித்துள்ளதால், ஒரு சில உறுப்புக் கல்லூரிகளில் ஒரு தாளுக்கு ரூ.150 ஆக இருந்த தேர்வு கட்டணம் ரூ.225 ஆக மாற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதையடுத்து அண்ணா. பல்கலை.யில் 50 சதவீத தேர்வு கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக துணைவேந்தர் வேல்ராஜ் அறிவித்துள்ளார். அதேபோல் கல்லூரிகளில் கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை மாணவர்களிடம் திருப்பி தர உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பு மாணவர்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.