எப்போதும் வித்தியாசமான கதை அம்சங்களையே தேடி நடித்து வரும் ஆண்ட்ரியா தற்போது ஒரு அனிமேஷன் திரைப்படத்தில் கடல் கன்னியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த திரைப்படம் குறித்தான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ஒர்க்கவுட் உடையில் தம்மாத்துண்டு இடுப்பை காட்டியபடி நின்ற ஐஸ்வர்யா மேனன் – ஜூம் செய்து பார்க்கும் ரசிகர்கள்!!
கடல் கன்னியாக நடிக்கும் ஆண்ட்ரியா:
தமிழ் மற்றும் மலையாளம் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக ஆண்ட்ரியா வலம் வந்து கொண்டிருக்கிறார். நடிகையாக மட்டும் அல்லாமல் பல திரைப்பட பாடல்களை பாடி அசத்தியுள்ளார். தற்போது இவர் பாடிய ஓ சொல்றியா பாடல் எட்டுத்திக்கும் ஒலித்து கொண்டிருக்கிறது. இவர் பெரும்பாலும் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைபடங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மங்காத்தா, என்றென்றும் புன்னகை, அரண்மனை, தரமணி, அவள், வடசென்னை, அரண்மனை 3, மாஸ்டர் மற்றும் பல திரைப்படங்களில் இவரது கதாபாத்திரம் வித்தியாசமாகவே சித்தரிக்கப்பட்டிருக்கும்.
தற்போது ஆண்ட்ரியா தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் அனிமேஷன் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஆண்ட்ரியா கடல் கன்னியாக நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதத்தில் தொடங்கவுள்ளதாகவும், இந்த ஆண்டின் பாதியில் இந்த திரைப்படம் வெளியாகக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. முதன் முறையாக ஆண்ட்ரியா வித்தியாசமான கதை களத்தில் கடல் கன்னியாக நடிக்கவுள்ளதால் இந்த திரைப்படத்திற்கு இப்போதில் இருந்தே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்