நேஷனல் ஜியோகிராஃபிக் பத்திரிகை நடத்திய போட்டோஷூட்டில் ஹாலிவுட் நடிகையும் இயக்குனருமான ஏஞ்சலினா ஜோலி தன் உடலில் நூற்றுக்கணக்கான தேனீக்களை கொட்டி போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஹாலிவுட்டின் பிரபல நடிகையாக அறியப்படுபவர் ஏஞ்சலினா ஜோலி. உலகிலேயே அதிக சம்பளம் பெறும் பிரபலங்களில் ஒருவரான இவர் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதையும் பெற்றுள்ளார். மேலும் இவர் மூன்று கோல்டன் குளோப் விருதுகளையும், பெற்றுள்ளார். இவர் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் நல்லெண்ண தூதராகவும் உள்ளார். நடிப்பை தாண்டி இவர் பலவிதமான நற்பணிகளில் ஈடுபடுவதற்காக மக்களின் பாராட்டை அதிகம் பெறுபவர்.
இவர் தற்போது தேனியை தன் உடல் முழுவதும் பரவவிட்டு ஒரு போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். ஆங்கில இதழான நேஷனல் ஜியோகிராஃபிக் பத்திரிகை இந்த போட்டோஷூட்டை நடத்தியுள்ளது. தேனீ பாதுகாப்பை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஏஞ்சலினா ஜோலி இந்த போட்டோஷூட்டை நடத்தியுள்ளார். இந்த தேனீக்கள் கிட்டத்தட்ட 18 நிமிடங்கள் அவர் உடலின் மீது இருந்துள்ளதாக இந்த போட்டோக்களை எடுத்த டான் விண்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் டான் விண்டர்ஸ் கூறியதாவது, நான் தேனீக்களை வளர்ப்பவன், ஏஞ்சலினா ஜோலிவுடன் என்னை பணிபுரிய சொன்னபோது, எனது கவனம் முழுவதும் அவரின் பாதுகாப்பு மேலேயே இருந்தது, என்று கூறியுள்ளார். இவர் எடுத்த இப்புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!