இதுவரை ஆண்ட்ராய்டு போன்களில் நடைமுறையில் இருந்த, 3ம் தர அனைத்து கால் ரெக்கார்டிங் ஆப்களும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கப்படுவதாக கூகுள் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதிரடி உத்தரவு:
வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பத்தில், ஆண்ட்ராய்டு போன்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், தங்கள் பயனர்களுக்கு புதுப்புது அப்டேட்களை கூகுள் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வழங்கி வருகிறது.
இந்த நிலையில், இது வரை புழக்கத்தில் இருந்த அனைத்து விதமான மூன்றாம் தர கால் ரெக்கார்டிங் ஆப்களை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்குவதாக, கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. தனிநபர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளதால், இந்த முடிவை எடுத்திருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்மார்ட் போன்களில், இருக்கும் கால் ரெக்கார்டிங் ஆப் தொடர்ந்து செயலில் இருக்கும் என்றும், ஆண்ட்ராய்டு போன்களில் உள்ள ஆப்கள் மட்டும் நீக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த ரெக்கார்டிங் ஆப்பை பயன்படுத்த விரும்புவோர், புதிய ஸ்மார்ட்போன்களை வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது. இதனால், ஸ்மார்ட்போன்களின் விலை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்