இந்தியா முழுவதும் கொரோனா பரவிய நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையிலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. இந்நிலையில், ஆந்திராவில் உள்ள அனைத்து தனியார் மற்றும் கார்ப்பரேட் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் என அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுவதாக அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
அதிரடி நடவடிக்கை..!
ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளதாவது, ஆந்திராவில் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. வரும் காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும். பாதிக்கப்படவர்களுக்கு சிகிச்சையளிக்கத் தனிமைப்படுத்தப்பட்ட அறைகள், படுக்கைகள், வென்டிலேட்டர்கள், சோதனை ஆய்வகங்கள் போன்ற மருத்துவ வசதிகள் அதிகமாகத் தேவைப்படும்.
இதனால், தனியார் மருத்துவமனைகள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. ‘தொற்று நோய் சட்டம் 1897’ன் படி, பேரிடர் காலங்களிலும் அதிக தொற்று நோய் உள்ள காலங்களிலும், தனியார் மருத்துவமனைகளின் கட்டுப்பாட்டை அரசு எடுத்துக்கொள்ளலாம். இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுகாதார துறை தலைமை செயலாளர்
இதையடுத்து, ‘தனியார் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் போன்றவை அவற்றின் சேவைகளை கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு முழுமையாக வழங்க வேண்டும்’ என, ஆந்திராவின் சுகாதார மற்றும் மருத்துவத்துறையின் சிறப்புத் தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஜவகர் ரெட்டி அனைத்து மருத்துவமனைக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இதற்குத் தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன. ஆனால், ஆந்திர அரசின் இந்த உத்தவு பல தரப்பினரின் பாராட்டை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |