தமிழக மாணவர்களே, அரையாண்டு தேர்வு தேதி மாற்றம்., கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!!

0
 தமிழக மாணவர்களே அரையாண்டு தேர்வு தேதி மாற்றம்
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெய்த  வரலாறு காணாத கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் தங்களின் வீடு மற்றும் உடமைகளை வெள்ளத்தில் இழந்து தவித்து வருகின்றனர். மேலும் பள்ளிகளில் நீர் சூழ்ந்த நிலையில் மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் இன்று பள்ளி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கையில் தமிழக கல்வித்துறை  முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ஜனவரி 2ஆம் தேதிக்கு மேல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் போது விடுபட்ட அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படும். மேலும் இதற்கான தேர்வு அட்டவணை கூடிய விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here