விஜய் டிவியின் முக்கிய சீரியலில் இருந்து விலகிய நடிகை… அவருக்கு பதிலாக இனி யாருனு தெரியுமா!!!

0

விஜய் டிவியில் மிக விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் செந்தூரப்பூவே. இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தர்ஷா குப்தா. தற்போது இவர் இந்த சீரியல் விட்டு ஒரு சில காரணங்களால் விலகி உள்ளார். மேலும் இந்த கதாபாத்திரத்திற்கு ஒரு புதுமுகத்தை சீரியல் குழு தேர்வு செய்து உள்ளது. அவரின் புகைப்படம் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளது.

செந்தூர பூவே என்ற சீரியலில் துரை சிங்கம் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ரஞ்சித் அவர்களும், துரை சிங்கத்தின் இரண்டாவது மனைவி ரோஜா கதாபாத்திரத்தில் ஸ்ரீநிதி நடித்து வருகின்றனர். இதில் தற்போதைய கதையாக துரை சிங்கத்தின் இரண்டாவது மகள் கயல் தனது அம்மாவை பார்க்க அடம் பிடிக்கிறார். இதனால் குடும்பத்தினரிடம் துரை சிங்கத்தின் முதல் மனைவி அருணா பற்றி கூறியதை வைத்து கொண்டு அவரின் உருவ படத்தை ரோஜா வரைந்து அனைவரையும் ஆச்சரியம் படுத்துகிறார்.

இதனை தொடர்ந்து துரை சிங்கம் மற்றும் அருணாவின் பிளாஷ்பேக் கதை ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இந்த சீரியல் தற்போது பேய், திரில்லர் கதையை நோக்கி நகர்கிறது. இந்நிலையில் இதில் ஐஸ்வர்யா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்த தர்ஷா குப்தா ஒரு சில சீரியல்களில் நடித்து மக்களுக்கு பரிச்சயமானவர். மேலும் இவர் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்று கொண்டார்.

தர்ஷா குப்தா சமீபத்தில் ஒரு சில படங்களில் கமிட்டாகி உள்ளார். இந்நிலையில் இவர் தற்போது இந்த சீரியலை விட்டு விலகி உள்ளார். இதனையடுத்து இந்த சீரியலில் ஒரு புது முகம் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் அவரின் புகைப்படம் இணையத்தில் கசிந்து உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here