அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பிறகு, அக்கட்சியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டார். அப்போது இருந்து இருவருக்கும் இடையிலான சச்சரவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் கோவையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பன்னீர் செல்வம், “முதலமைச்சராக இருந்த எடப்பாடி என்னென்ன செய்தார் என எனக்கு தெரியும். அதனை அவிழ்த்து விட்டால் அவர் சிறைக்கு செல்ல வேண்டி வரும்.” என கூறியிருந்தார்.
இது தொடர்பாக எடப்பாடி-யிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “ஓ.பி.எஸ். தன் குடும்பத்தினர் பெயரில் நிறைய சொத்துக்களை வாங்கி வைத்துள்ளார். அது தொடர்பான வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும். அப்போது நிச்சயமாக தண்டனை கிடைத்து திகார் சிறைக்கு செல்வார்.” என கூறியுள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
ஐயோ.., அவனா நீ.., திருமணமாகாத விரக்தியில் வாலிபர் செய்த செயல்.., லீக்கான தகவல்!!!