கோலிவுட் திரையில் ‘போடா போடி’ என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை வரலக்ஷ்மி. மேலும் ‘தாரை தப்பட்டை’ படத்தில் தன்னுடைய தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார். இதை தொடர்ந்து நெகட்டிவ் ரோலில் களமிறங்கி தனது அசத்தலான நடிப்பு திறனால் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க தொடங்கினார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் திரைக்கு வந்த ”வீர சிம்ஹா ரெட்டி” என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். இந்நிலையில் இவர் ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இவருடன் நடிகர் ஆரவ், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படம் வரும் 19 ஆம் தேதி ott தளத்தில் வர இருக்கிறது. இதற்கான promotion விழாவில் கலந்து கொண்ட இவர், இப்படத்தில் நல்ல கதை இருக்கிறது.
“தோனி, விராட் போல என்னால் கேப்டனாக இருக்க முடியாது”…, டு பிளெசிஸ் பளிச் பேட்டி!!
இதோடு இப்பட கதையை கேட்கும் போதே எனக்கு மிகவும் த்ரில்லராக இருந்தது. ரசிகர்களாகிய நீங்கள் நிச்சயம் இப்படத்திற்கு உங்களின் ஆதரவை கொடுக்க வேண்டும். மேலும் நான் ஒரு நடிகை, சினிமாவில் எனக்கு எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிப்பேன். அது ஹீரோயின், வில்லி, என எதுவாக இருந்தாலும் சரியே. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு வில்லியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் அதை ஏற்று நடிப்பேன் என்று கூறியுள்ளார்.