ஆண்டுதோறும், ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7 வது ஊதியக்குழு பரிந்துரையின் கீழ், அகவிலைப்படியை (DA) மத்திய மாநில அரசு குறிப்பிட்ட சதவீதத்திற்கு மேல் உயர்த்தி வருகிறது. இதன்படி, மத்திய அரசானது கடந்த ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படியை மார்ச் மாதத்தில் உயர்த்துவதாக அறிவித்திருந்தது. இந்த வகையில், இந்தியாவில் உள்ள ராஜஸ்தான், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் அகவிலைப்படி 3% முதல் 4% வரை உயர்த்தினர்.
ஆனால், தமிழகத்தில் மட்டும் உயர்த்தப்படாமலே இருந்தது. இதன் காரணமாக, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பல்வேறு போராட்டங்களை நடந்தி வந்தனர். இதற்கு எல்லாம் தற்போது முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 38%-ஆக இருந்த அகவிலைப்படி ஏப்ரல் 1ம் தேதி முதல் 42%-ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அகவிலைப்படி உயர்வு மூலம், தமிழகத்தில் உள்ள சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.