தென்னிந்திய சினிமா துறையில் ரசிகர்களின் கனவு நாயகியாக வலம் வந்தவர் தான் நடிகை சகிலா. கடந்த சில வருடங்களாக சினிமா பக்கம் வராத இவர், தற்போது அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் விரைவில் திரைக்கு வர இருக்கும் ‘இனிமே நாங்கதான்’ படத்தின் டிரைலர் விழாவில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் ஓர் முக்கிய கருத்தை தெரிவித்துள்ளார்.
அதில், கடந்த ஐந்து நாட்களாக சகிலாவை அடித்து நொறுக்கி விட்டார்கள் என்ற கருத்துக்கள் தலைப்பு செய்தியாக உலா வருகிறது என்றார். மேலும் என் மேல யாராவது கை வைக்க முடியுமா என்றும் நீங்க செய்திக்காக ஒன்னு எழுதுறீங்க என்று கூறி தனது கருத்தை முடித்துள்ளார். தற்போதைய இவரின் கருத்து இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
ஆதார் அட்டை பதிவு மற்றும் புதுப்பிப்பு விதிகளில் புதிய மாற்றம்., வெளியான முக்கிய அறிவிப்பு!!!