இதெல்லாம் ரொம்ப கொடுமை.. இது நடந்து இருந்தால் என் கணவர் உயிர் பிரிந்திருக்காது – மனம் திறந்த மீனா!

0
நடிகை மீனாவின் கணவர் இப்படிப்பட்டவரா?? இந்த மனுஷனுக்கா இப்படி ஒரு நிலைமை??

தமிழ் சினிமாவின் 90ஸ் காலத்தில் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருந்தவர் மீனா. இவர் நடித்த மாயி, முத்து, மாமன் மகள், ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இவர் திருமணம் முடிந்து செட்டில் ஆனாலும் சினிமாவில் இவரின் மார்க்கெட் தொடர்ந்து நீடித்தது. இவர் 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் உண்டு. தெறி படத்தில் விஜய்யின் மகளாக நைனிகா நடித்து இருப்பார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மீனாவின் கணவர் சமீபத்தில் மரணம் அடைந்தார். இந்நிலையில் நடிகை மீனா தன் கணவர் இறப்பு குறித்து சர்வதேச உடல் உறுப்பு தான தினத்தையொட்டி, கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில் ‘என் கணவர் வித்யாசாகருக்கு உறுப்புகள் தானம் செய்ய யாராவது முன்வந்து இருந்தால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும். அப்படி நடந்திருந்தால் என் வாழ்க்கையே மாறி இருக்கும். ஒருவர் உடல் உறுப்பு தானம் செய்தால் 8 பேரின் உயிர் காப்பாற்றப்படும். நான் என் உடல் உறுப்புகளை தானம் செய்கிறேன்’ என பதிவிட்டுள்ளார். கணவரை நினைத்து மீனாவின் இந்த பதிவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here