சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் சித்ராவின் கணவருக்கு தற்போது நிபந்தனை ஜாமீனை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை ஹேம்நாத் மதுரையில் தங்கி இருக்க வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நடிகை சித்ரா மரணம்
சின்னத்திரை நடிகை மற்றும் தொகுப்பாளினியாக இருந்தவர் தான், விஜே சித்ரா. இவர் கடந்த டிசம்பர் மாதம் தனியார் ஹோட்டலில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டது. இது குறித்து நடிகை சித்ராவின் தாயார் போலீசில் புகார் அளித்தார்.
ஏழை மக்களுக்கு 5 ரூபாயில் உணவு திட்டம் – முதல்வர் துவக்கி வைப்பு!!
இதனை அடுத்து சித்ராவிற்கு என்று நிச்சயித்த மாப்பிளை ஹேம்நாத் மீது சந்தேகம் ஏற்பட்டு அவரை போலீசார் கைது செய்தனர். அதே போல் அவரது குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அதில் ஹேம்நாத் சித்ராவை மிகவும் துன்பப்படுத்தியுள்ளது அனைவருக்கும் வெட்டவெளிச்சமாகியது. அவரது துன்புறுத்தலை ஒரு அளவிற்கு மேல் பொறுத்து கொள்ளமுடியாத சித்ரா தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிய வந்தது. ஹேம்நாத் மேல் ஒரு வழக்கும் உள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது இந்த வழக்கில் புதிய திருப்பமாக சித்ராவின் கணவரான ஹேம்நாத்திற்கு தற்போது நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. இதனை உயர்நீதிமன்றம் உறுதியும் செய்துள்ளது. அதே போல் மறு உத்தரவினை உயர்நீதிமன்றம் பிறப்பிக்கும் வரை ஹேம்நாத் மதுரையில் தங்கி இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.