தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிசியாக நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. அவரிடம் தமிழ் மற்றும் ஹிந்தியில் ஏகப்பட்ட படங்கள் கைவசம் வைத்துள்ளார். சமீபகாலமாக இவர் ஹீரோவாக நடிக்கும் எந்த திரைப்படமும் சரியாக ஓடாமல் தோல்வி அடைந்து வருகிறது. இதற்கு காரணம் அவர் வில்லனாக நடித்து வருவது தான் காரணம் என்று அவருடைய ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் மலேசியாவில் நடிகர் விஜய் சேதுபதி செய்த காரியம் இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது நடிகர் விஜய் சேதுபதி ஆறுமுக குமார் இயக்கத்தில் ஹீரோவாக நடித்து வரும் புதிய படத்தின் ஷூட்டிங் தற்போது மலேசியாவில் நடைபெற்று வருகிறது. அங்கு அவரை காண எக்கச்சக்க ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். அனைவரிடமும் முகம் சுளிக்காமல் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
‘மாமன்னன் திரைப்படத்திற்கு இந்த சான்றிதழ் தான்…,படக்குழு அறிவிப்பு….,
அப்போது பெண் ரசிகர் ஒருவர் மலேசியாவுக்கு வீட்டு பணிப் பெண்ணாக வேலைக்கு வந்துள்ளார். வந்த இடத்தில் அவருக்கு வேலை பிடிக்காததால் அங்கிருந்து வெளியே வந்து கிடைக்கிற சின்ன சின்ன வேலையை செய்து வருகிறார். அவருடைய விசா முடிந்ததால் அந்த பெண்ணால் சொந்த நாட்டுக்கு செல்ல முடியவில்லை என்று கதறி அழுதுள்ளார். உடனே அதிகாரிகளை சந்தித்து தனது சொந்த செலவில் அவரை அனுப்பி வைத்ததாக வலைபேச்சு அந்தணன் தெரிவித்துள்ளார்.