சாலை விபத்தில் இறந்த ரசிகர் – கண்ணீர் விட்டு கதறிய சூர்யா! ரசிகர்களுக்கு முக்கிய வேண்டுகோள்!

0

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த, ஜெகதீசன் என்ற சூர்யா மன்ற நிர்வாகி, சாலை விபத்தில் மரணம் அடைந்ததால், அவரது இல்லத்திற்கு நடிகர் சூர்யா நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.

 நேரில் சென்று சூர்யா  :

நடிகர் சூர்யா, தற்போது வாடிவாசல் என்ற படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இது மட்டுமில்லாமல், அகரம் என்ற அறக்கட்டளை வாயிலாக பல குழந்தைகளின் கல்விக்கு  உதவியாக இருந்து வருகிறார். இவரைப் போலவே அவருடைய ரசிகர்களும், பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த, சூர்யா ரசிகர் மன்ற நிர்வாகி ஜெகதீசன் என்பவர் அண்மையில் சாலை விபத்தில் மரணமடைந்தார்.

இதை கேள்விப்பட்ட சூர்யா, ரசிகரின் வீட்டிற்கு நேரில் சென்று  அவரது புகைப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்தாரிடம், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். குழந்தைகளின் கல்விக்காக, எதையும் செய்யத் தயாராக இருப்பதாக உறுதியளித்தார். மேலும், ரசிகர்களிடம் வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here