சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். ஒற்றுமைக்கு இலக்கணமாக திகழ்ந்து வரும் 4 அண்ணன் தம்பிகளுக்கு இடையில் விரிசல் விழுவது போன்ற கதைக்களத்தை நோக்கி இந்த சீரியல் தற்போது நகர்கிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்படி இருக்கையில் இந்த சீரியலில் முல்லையின் அப்பாவாக நடித்து வரும் எஸ்.டி.பி. ரோசாரி ஒரு தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். இவர் இந்த சீரியல் மட்டுமல்லாது பாக்யலக்ஷ்மி சீரியலில் பாக்கியாவின் மாமனாராக ராமமூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதுபோக வெள்ளித்திரையில் தொட்டி ஜெயா, பொல்லாதவன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குறித்து இவரிடம் கேட்கையில் சில வார்த்தைகள் குறிப்பிட்டுள்ளார். அதாவது ஒரு சீரியலில் நடிக்கும் நடிகர்கள் எவ்வாறு நடிக்க வேண்டும் என்பதை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை பார்த்து தான் கற்றுக்கொள்ள வேண்டும். அந்த அளவிற்கு அந்த சீரியலில் நடிக்கும் ஒவ்வொரு ஆரிஸ்ட்டும் அந்த கேரக்டராகவே மாறி விட்டனர். மேலும் இவர்களது இந்த தரமான நடிப்பு தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இந்த அளவிற்கு வெற்றி பெற முக்கிய காரணம் என கூறியுள்ளார்.
View this post on Instagram