“மிட்செல் ஸ்டார்க்கின் பந்தை இப்படி தான் விளையாட வேண்டும்”…, சூர்யகுமாருக்கு ஆஸ்திரேலிய கேப்டன் அட்வைஸ்!!

0
"மிட்செல் ஸ்டார்க்கின் பந்தை இப்படி தான் விளையாட வேண்டும்"..., சூர்யகுமாருக்கு ஆஸ்திரேலிய கேப்டன் அட்வைஸ்!!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தடுமாறும் சூர்யகுமார் யாதவுக்கு, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் அறிவுரை கொடுத்துள்ளார்.

சூர்யகுமார் யாதவ்:

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில், முதல் இரண்டு போட்டிகளில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்து வைத்துத்துள்ளது. இதனால், வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெற இருக்கிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில், சூர்யகுமார் யாதவ் இடம் தான் பெறும் கேள்வி குறியாகி உள்ளது. ஆனால், ஷ்ரேயாஸ் ஐயர் இல்லாத காரணத்தால் சூர்யகுமார் யாதவ் பிளேயிங் லெவனுக்கான இடத்தை பிடித்து கொண்டுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. சூர்யகுமார் யாதவ் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2 போட்டிகளிலும், மிட்செல் ஸ்டார்க் பந்தியில் டக் (0) அவுட்டாகி இருந்தார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்., பெண்களை ஊக்குவிக்க போட்டிகள்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

நாளைய போட்டியிலும் இவர் சொற்ப ரன்களில் வெளியேறினால், ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பது அரிதான விஷயமாகி விடும். இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் சூர்யகுமார் குறித்து, மிட்செல் ஸ்டார்க்கின் முதல் 2 பந்துகளை மட்டும் கூர்மையாக கவனித்து விளையாட வேண்டும் என ஸ்டார்ட் ஸ்போர்ட்ஸில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here