நடிகர் சூரி சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மாணவர்களுக்கு அட்வைஸ் கொடுத்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.
நடிகர் சூரி:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சூரி. தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை படத்தின் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வீடியோ வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் வருகிற மார்ச் 30ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்படத்தை தொடர்ந்து அடுத்த இரண்டு படங்களில் ஹீரோவாக நடிக்க கமிட்டாகி இருக்கும் நிலையில் சமீபத்தில் நடந்த பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது மாணவர்களுக்கு அவர் செய்த அட்வைஸ் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது. திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் தனியார் பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக சென்ற சூரி மேடையில், முதல யார் யார் செல்போன் வச்சிருக்கீங்க கை தூக்குங்க என்று பேச தொடங்கினார்.
யாரும் அதிகமாக செல்போனை use பண்ணாதீங்க. தேவைப்படும் பொழுது மட்டும் கேட்டு வாங்கிக்கோங்க. அதே போல பிறந்த குழந்தைகளுக்கு போன் கொடுக்காதீங்க. எதற்கு சொல்லுறேன் என்றால், இப்படி தான் என் நண்பனின் குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் கூட ஆகல., குழந்தை அழுகிறது என்று செல்போனை கொடுத்து பழகிவிட்டார். அந்த லைட் வெளிச்சத்தால் கண்ணில் இருந்த நரம்பு கட் ஆகி இறந்து போச்சு. அந்த குழந்தைக்கு என்ன தெரியும் சொல்லுங்க. எனவே யாரும் செல்போன் use பண்ணாதீங்க என்று அட்வைஸ் செய்துள்ளார்.
View this post on Instagram