‘மிக் ஜாம்’ புயல் காரணமாக கடந்த சில தினங்களாவே சென்னையில் உள்ள பல இடங்களில் மழைநீரால் சூழப்பட்டிருந்தது. தேங்கிய மழை நீரை வெளியே எடுக்கும் பணிகள் தீவிரமாக ஒரு பக்கம் நடைபெற்று வரும் நிலையில், இன்னொரு பக்கம் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை தமிழக அரசு முதல் சினிமா பிரபலங்கள் வரை கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு காரியத்தை செய்துள்ளார். அதாவது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வரும் மக்களுக்கு நிவாரண நிதியாக ரூ. 10 லட்சம் காசோலையை உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார். இதற்கு முன்னர் கார்த்தி, சூர்யா, kpy பாலா, விஜய் மக்கள் இயக்கம் ஆகியோர் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Enewz Tamil WhatsApp Channel
தமிழக மக்களுக்கு டபுள் டமாக்கா…, நிவாரணத் தொகையுடன் பொங்கல் பரிசு?? வெளியான முக்கிய தகவல்!!