விமானத்துக்குள்ளேயே 5 மணி நேரம் சிக்கி பரிதவித்து போன ரோஜா – வழக்கு தொடுக்க உள்ளதாக ஆவேசம்!!

0
இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த நடிகையும் ஆந்திர மாநில எம்எல்ஏவுமான ரோஜா, நடுவானில் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக சிக்கித் தவிர்த்ததாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ரோஜா பரிதவிப்பு:

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாகவும், ஆந்திர மாநிலத்தின் எம்எல்ஏவுமாக விளங்குபவர் நடிகை ரோஜா. இவர், ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து திருப்பதிக்கு சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில், 70 பயணிகளுடன் சேர்ந்து பயணம் மேற்கொண்டார். நடுவானில் விமானத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக, ரேனிகுண்டாவில் தரை இறங்க வேண்டிய விமானம்,  பலமணிநேரம் வானிலேயே  சுற்றி, சிறிது நேரம் கழித்து பெங்களூர் விமான நிலையத்தில் தரை இறங்கியது.
இது குறித்து அதிகாரிகள் எந்த தகவலும் தெரிவிக்காமல், விமானத்திற்கு உள்ளேயே தங்களை 5 மணி நேரம் காக்க வைத்ததாக ரோஜா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும், இந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது இது, தெலுங்கு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here