‘பாக்கியலட்சுமி’ நடிகையின் முன்னாள் காதலன் தலைமறைவா? அவரே கொடுத்த அதிர்ச்சி பேட்டி?

0
'பாக்கியலட்சுமி' நடிகையின் முன்னாள் காதலன் தலைமறைவா? அவரே கொடுத்த அதிர்ச்சி பேட்டி?
தமிழ் சினிமாவில் பிரபல வில்லனாக இருந்து வரும் நடிகர் ஆர் கே சுரேஷ், ஆருத்ரா கோல்டு பண மோசடியில் சம்மந்தப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. அதாவது  ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டினால் மாதம் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக கூறி மக்களிடம் அதிக பணங்களை வாங்கி கிட்டத்தட்ட  ரூ 2, 438 கோடி பணத்தை ஆருத்ரா கோல்டு நிறுவனம் ஏமாற்றியுள்ளனர்.  இதில் ஆர்.கே.சுரேஷிற்கு தொடர்பு இருப்பதாக கூறி பொருளாதார குற்றப்பிரிவினர் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் ஆர் கே சுரேஷ் வெளிநாட்டில் தனது குடும்பத்துடன் தலைமறைவாக இருந்து வருவதாக கூறப்பட்டது.
இந்நிலையில் சென்னை அசோக் நகரில் உள்ள மாநில பொருளாதார குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆர்.கே.சுரேஷ் ஆஜராகி உள்ளார். அப்போது ஏன் தலைமறைவாக இருந்தீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்க, என்னது தலைமறைவாக இருந்தேனா, எல்லாம் இங்க இருக்கும் பொழுது நான் ஏன் தலைமறைவாக இருக்கனும் என்று கூறியுள்ளார்.இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி ஜெனி உடைய முன்னாள் காதலன் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here