தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான மீனா, தன் கணவர் இறப்பிற்கு காரணம் இதுதான், இனி யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது என பதிவிட்டு, முக்கியமான முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
மீனா முடிவு:
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் நடிகை மீனா. சமீபத்தில், சூப்பர் ஸ்டாருடன் இணைந்து அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். இவரது கணவர் வித்யாசாகர் நுரையீரல் தொற்று காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் உயிரிழந்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
நுரையீரல் பாதிக்கப்பட்டு, மாற்று நுரையீரலுக்காக, 3 மாதம் வரை காத்திருந்த அவருக்கு தானம் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் உயிரிழந்தார். இதை உணர்ந்து கொண்ட மீனா, என் கணவருக்கு தகுந்த நேரத்தில் நுரையீரல் தானம் கிடைத்திருந்தால், என் வாழ்க்கை இப்படி ஆகி இருக்காது.
பீஸ்ட் திரைப்படத்தால் வாரிசுக்கு ஏற்பட்டுள்ள சங்கட்டமான நிலைமை.,, இதுதான் காரணமா!!
எனவே, என் நிலைமை இனி யாருக்கும் வரக்கூடாது என்பதற்காக என் உடல் உறுப்புகள் அனைத்தையும் தானம் செய்துள்ளேன். இனி எல்லாரும் இந்த தானம் செய்ய முன்வர வேண்டும் என சர்வதேச உடல் உறுப்பு தான தினத்தில், இது குறித்த பதிவிட்டிருந்தார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த பலரும், மீனாவை மனதார பாராட்டி வருகின்றனர்.
View this post on Instagram