ரிவ்யூ கேட்க மறுத்த ரோஹித்.., கடுப்பான ரிஷப் பந்த்.., வெளியாகிய சுவாரஸ்ய வீடியோ!!

0
ரிவ்யூ கேட்க மறுத்த ரோஹித்.., கடுப்பான ரிஷப் பந்த்.., வெளியாகிய சுவாரஸ்ய வீடியோ!!
ரிவ்யூ கேட்க மறுத்த ரோஹித்.., கடுப்பான ரிஷப் பந்த்.., வெளியாகிய சுவாரஸ்ய வீடியோ!!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட சலசலப்பிற்கான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

ரோஹித் சர்மா

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான கடைசி T20 போட்டி நேற்று இந்தூரில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சுவாரஸ்யமான பல சம்பவங்கள் அரங்கேறியது. அதில் ரிஷப் பந்த் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவருக்கும் இடையில் ஏற்பட்ட சலசலப்பிற்கான வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது தென் ஆப்பிரிக்கா அணி வீரர் ரோசோவ் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது உமேஷ் யாதவ் பௌலிங் செய்து கொண்டிருந்தார். அப்போது ரமேஷ் உமேஷ் வீசிய பந்து ரோசோவ் காலில் பட்டு விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் கையில் கேட்ச் ஆக மாறியது. ஆனால் பந்து பேட்டில் பட்டு தான் தனது கையில் கேட்ச் ஆக விழுந்தது ரிஷப் பந்த் நினைத்து கொண்டார். இதனால் ரோஹித்திடம் அவுட் என ரிஷப் கூறினார்.

T20 வேர்ல்ட் கப் இப்படி தான் இருக்கும்.., பேட்டி அளித்த இந்திய வீரர்.., அப்போ வெற்றி கைகூடுமா??

ஆனால் அதற்கு ரோஹித்தும், உமேஷ் யாதவும் மறுத்தனர். இதனால் கோபமடைந்த ரிஷப் பந்த் ரிவ்யூ கேட்கும் படி ரோகித்திடம் முறையிட்டார். ஆனால் ரோஹித் இதை கண்டுகொள்ளவில்லை. இதனால் ரிஷப் பந்த் கடுப்பானார். இதற்கான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ரோகித் ஒவ்வொரு போட்டியிலும் தினேஷ், ரிஷப் பந்த் போன்ற அனைத்து வீரர்களிடமும் கோபப்படுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here