நடிகர் ஜூனியர் என்டிஆர் சமீபத்தில் நடந்த புரொமோஷன் நிகழ்ச்சியில் ரசிகர் கேட்ட கேள்விக்கு கோபமடைந்த சம்பவம் திரையுலகில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
நடிகர் ஜூனியர் என்டிஆர்:
தெலுங்கு வட்டாரங்களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஜூனியர் என்டிஆர். கடந்த ஆண்டு ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற RRR திரைப்படத்தில் ராம் சரணுடன் சேர்ந்து நடித்திருந்தார் ஜூனியர் என்டிஆர். இப்படம் வசூல் மட்டுமின்றி பல விருதுகளை குவித்து வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அந்த வகையில் சமீபத்தில் “நாட்டு நாட்டு” பாடல் ஆஸ்கர் விருதை வென்றது. இந்நிலையில் நடிகர் ஜூனியர் என்டிஆர், தாஸ் கா தம்கி என்கிற படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு கோபத்துடன் பதிலளித்துள்ளார். அதாவது மேடையில் ஜூனியர் என்டிஆர் பேச ஆரம்பித்த போது ரசிகர்கள் அனைவரும் அவரின் அடுத்த படத்தின் அப்டேட் கேட்டு கூச்சலிட்டனர்.
அதை கேட்டு வெக்ஸ் ஆன ஜூனியர் என்டிஆர் இப்படியே கேட்டுட்டே இருந்தீங்க என்றால் நான் படத்தில் நடிப்பதையே விட்டுவிடுவேன் என்று கூறினார்.இதை கேட்ட ரசிகர்கள் அனைவரும் திகைத்து நின்றனர். அதன் பிறகு அனைவரையும் Normal-க்கு கொண்டு வர, படங்களில் நடிப்பதை நிறுத்தும் எண்ணம் எனக்கு இப்போதைக்கு இல்லை என்று கூறியுள்ளார்.