ஆவின் பாலகங்களில் ரூ.2 ஆயிரத்துக்கு மேல் ‘கேக்’ வகைகள் உள்பட ஆவின் பொருட்கள் வாங்கினால் அந்த வளாகத்தில் பிறந்தநாள் கொண்டாட அனுமதி வழங்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆவின் பாலகங்கள்
தமிழகம் முழுவதும் ஆவின் பாலகங்களை அரசாங்கம் நடத்தி வருகிறது. மேலும் பாலின் விலை அவ்வப்போது உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில், மக்களை கவர வேண்டும் என்பதற்காக பல திட்டங்களை ஆவின் நிர்வாகம் அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஆவின் வளாகத்தில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிடுவதற்காக டேபிள், மேசை, சோபா போன்ற வசதிகளை ஆவின் நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த நிலையில் மேலும் மக்களை கவர விரும்பி புதிய அறிக்கை ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது சென்னையில் இருக்கும் முக்கிய ஆவின் நிலையத்தில் ஒரு நபர் 2000 ரூபாய்க்கு மேல் கேக் உள்ளிட்ட ஆவின் தயாரிப்புகளை வாங்கினால், அதே வளாகத்தில் பிறந்த நாளை கொண்டாடலாம் என்று அறிவித்துள்ளது.
இனிமேல் நண்பர்களுக்கோ, குடும்பத்தினருக்கோ பிறந்த நாள் கொண்டாட வேண்டும் என்றால் ஆவின் பாலகங்களுக்கு செல்லலாம். அதுமட்டுமின்றி இந்த வசதி சென்னை அம்பத்தூர் சோழிங்கநல்லூர் விருகம்பாக்கம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் தமிழகம் முழுவதும் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.