தமிழில் பிரபல நடிகரான ஆர்யா தொடர்ந்து பல சர்ச்சையில் சிக்கி வந்த நிலையில் தற்போது ஜெர்மனி நாட்டை சேர்ந்த பெண் ஒருவரை 80 லட்சம் வாங்கி கொண்டு திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றியுள்ளார். இந்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது.
ஆர்யா
தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் என்று அழைக்கப்படுபவர் ஆர்யா. தனது நடிப்பாலும் அழகாலும் ரசிகர்கள் மனதில் நிலைத்து நின்றவர். ஆரம்ப காலத்திற்க்கேயே பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார். பிரபல நடிகை பூஜாவும் இவரும் பல வருடம் காதலித்து வந்ததாக சொல்லப்பட்டது. மேலும் ஆர்யா தொடர்ந்து கலர்ஸ் டிவியில் வெளியான எங்க வீட்டு மாப்பிளை என்ற நிகழ்ச்சியில் மணப்பெண் தேடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதில் 13 பெண்கள் கலந்துகொண்டனர். 6 மாதங்கள் வரை நடந்த இந்த நிகழ்ச்சியில் கடைசி நேரத்தில் ஜெகா வாங்கிவிட்டார். ஒரு பெண்ணை மட்டும் தேர்ந்தெடுத்தால் மற்றொரு பெண்ணுக்கு கஷ்டமாகி விடும் என்று சொல்லி எஸ்கேப் ஆகி விட்டார். அதன் பிறகு தனக்கு டைம் வேண்டும் என்று கூறி விட்டார். அதன் பிறகு கஜினிகாந்த் திரைப்படத்தில் சயிஷா உடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். அந்த படத்தில் சயிஷாவை பிடித்து போக இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இது பலருக்கும் ஷாக் தான்.
சினிமாவில் தனது 11 வது வருடத்தை கொண்டாடும் சமந்தா – குவியும் வாழ்த்துக்கள்!!
அப்போ அந்த பெண்களின் நிலைமை என பலரும் ஆர்யாவை திட்ட தான் செய்தனர். இப்படி சயிஷாவை திருமணம் செய்துகொண்டு நிம்மதியாக இருந்த ஆர்யாவிற்கு தற்போது புதுவிதமாக பிரச்சனை வந்துள்ளது. அதாவது இவர் ஜெர்மனியை சேர்ந்த பெண்ணிடம் ரூ.80 லட்சம் வரை வாங்கிக்கொண்டு திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியுள்ளார். அந்த பெண் தற்போது ஆதாரத்துடன் புகாரளித்துளார். இதற்கு ஆர்யாவின் அம்மாவும் ஒரு காரணம் என்றும் கூறியுள்ளார். இதனால் சயிஷா மற்றும் ஆர்யா இடையே சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாம்.