நடிகர் யோகி பாபு ஹீரோவாக நடித்த பொம்மை நாயகி திரைப்படம் நேற்று வெளியான நிலையில் தற்போது அவர் கண்கலங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை யோகி பாபு:
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, தற்போது ஹீரோ அவதாரம் எடுத்து நடித்து வருபவர் தான் நடிகர் யோகி பாபு. இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித், சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி மற்றும் சிவா ஆகியோர் படத்தில் போட்டி போட்டு நடித்துள்ளார். மேலும் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் கடந்த 2021ம் ஆண்டு மண்டேலா படத்தின் மூலம் ஹீரோவாக நடிக்க தொடங்கினார் நடிகர் யோகி பாபு. தற்போது மீண்டும் ஹீரோவாக நடித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது இயக்குனர் ஷான் படைப்பில் நடிகர் யோகிபாபு லீடு ரோலில் நடித்த திரைப்படம் தான் பொம்மை நாயகி. இந்த திரைப்படம் நேற்று திரையரங்கில் வெளியான நிலையில், தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் யோகி பாபு காமெடியனாக நடிக்காமல், செண்டிமெண்ட் கேரக்டரில் நடித்துள்ளார். இந்த நிலையில் நேற்று வெளியான இந்த படத்திற்காக சிறப்பு காட்சியில், நடிகர் ஆர்யா, ஜெயம் ரவி, உலக சூப்பர் ஸ்டார் சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இது எல்லாம் ஒரு வேகமா?? இந்திய வீரரை சீண்டும் பாகிஸ்தான் கிரிக்கெட்டர்!!
படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள். அவர்கள் பேசியதாவது, சிவா மற்றும் ஆர்யா, யோகி பாபுவின் கேரியரில் மண்டேலா படம் போல் இந்த படமும் வெற்றி பெரும் என்று கூறினார். அதன் பின்னர் வந்த ஜெயம் ரவி யோகி பாபுவை புகழாரம் பாடினார். மேலும் இந்த மாதிரி படம் எடுக்க முதலில் தைரியம், திறமை வேண்டும் என்று படத்தின் இயக்குனரையும் புகழ்ந்து பேசினார். மேலும் கண்கள் கலங்கிய நிலையில் யோகி பாபு இருக்க அனைவரும் கட்டி பிடித்த நெகிழ்ச்சி சம்பவம் வைரலாக பரவி வருகிறது.