இந்தியாவின் அதிவேகமாக பந்து வீச கூடியவராக உள்ள உம்ரான் மாலிக்கை குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இது எல்லாம் ஒரு வேகமா என கூறியுள்ளார்.
உம்ரான் மாலிக்:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்பில், இந்திய அணியானது தயாராகி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோஹைல் கான் இந்திய வீரர்களை சீண்டும் வகையில், சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அதவாது, டி20 உலகக்கோப்பை தொடரில், பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி அடித்த சிக்ஸரை ஐசிசியே பெரிய அளவில் கொண்டாடியது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஆனால், இது எல்லாம் சாதாரணமாக அனைத்து பேட்ஸ்மேன்களும் அடிக்க கூடிய ஒன்று தான். அதை ஏன் அனைவரும் கொண்டாடி வருகிறார்கள் என்று சோஹைல் கான், அனைவரின் கருத்துக்கும் மாறாக கூறியிருந்தார். இந்நிலையில், விராட் கோலியை தொடர்ந்து, உம்ரான் மாலிக்கையும் சோஹைல் கான், 156 கி மீ வேகத்தில் பந்து வீசுவது எல்லாம் சாதாரணம் தான்.
சொந்த மண்ணில் மிரட்டும் ஹிட் மேன்…, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜொலிப்பாரா??
150 முதல் 155 கிமீ வேகம் வரை பந்து வீச கூடிய 12 வீரர்களை கூட எளிதாக கூறிவிடலாம். பாகிஸ்தானிலேயே அதிக வீரர்கள் அசால்ட்டாக அதிவேகத்தில் பந்து வீசுபவர்கள் உள்ளனர் என்று சோஹைல் கான் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, இதற்கு முன் பாகிஸ்தானின் ஷோயப் அக்தர் 161.3 கி மீ வேகத்தில் பந்து விசியதை எல்லாம் முறியடிக்க எந்த மனிதனாலும் முடியாது என்று சோஹைல் கான் கூறியுள்ளார்.