இன்றைய காலகட்டத்தில் நகர்புறங்களை தொடர்ந்து கிராம புறங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப Gpay, Phonepe உள்ளிட்ட UPI செயலிகளின் பயனாளர்களும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இருந்தாலும் ஒரு சில நேரங்களில் பணம் அனுப்பும் போது, தவறுதலாக வேறொருவருக்கு அனுப்ப நேரிடும். அந்நேரத்தில் பணத்தை திரும்ப பெறுவதற்கான வழிமுறைகள் தெரியாமல் பலரும், கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்., அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன முக்கிய அப்டேட்!!!
எனவே இனி தவறுதலான பரிவர்த்தனை நடந்துவிட்டால், பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:
- தவறான பரிவர்த்தனையின் Screen shot எடுத்து, வங்கிக்கு புகார் தெரிவிப்பதோடு UPI செயலியின் வாடிக்கையாளர் சேவையிடமும், நடந்ததை எடுத்துரைக்க வேண்டும்.
- அப்படி வங்கியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால் வங்கியின் குறைதீர்ப்பாளரை அணுக வேண்டும்.
- அப்படியும் குறைகள் தீர்க்கப்படவில்லை என்றால் RBI-ன் ஒழுங்குமுறை அமைப்பான NPCI-ஐ தொடர்பு கொள்ள அறிவுறுத்தி உள்ளனர்.