போதைப்பொருள் வழக்கில் கைதான ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்குவதை மும்பை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
நீதிமன்றம் அதிரடி:
தடை செய்யப்பட்ட போதைப்பொருள் வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் மும்பை நகர போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை அடுத்து, இந்தி திரை பிரபலங்கள் சல்மான் கான் உள்ளிட்ட பலரும் ஆரியன் கானுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
இந்த கடினமான சூழலில் இருந்து நீ மீண்டு வருவாய் என்று நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஆரியனுக்கு அண்மையில் கடிதம் எழுதினார். இந்த நிலையில் தற்போது, இவரின் ஜாமினை மும்பை நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது. ஜாமீன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தின் இந்த அதிரடி செயல் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்