ஆதார் வைத்திருப்போருக்கான புதிய அப்டேட் ஒன்றை, ஆதார் அமைப்பு உடனடியாக வெளியிட்டுள்ளது. இந்த அப்டேட்டை பயனர்கள் உடனடியாக, சோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆதார் அப்டேட்:
நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு நபர்களுக்கும் ஆதார், தனிப்பெரும் அடையாளமாக திகழ்ந்து வருகிறது. இந்த ஆதார் கார்டில் உள்ள 12 இலக்க தனித்துவமிக்க எண், ஒவ்வொரு தனிப்பட்ட நபரின் ஒட்டுமொத்த தகவல்களை உள்ளடக்கியதாக திகழ்ந்து வருகிறது. அரசின் அனைத்து திட்டங்களுக்கும் இந்த ஆதார் முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
தற்போது இந்த ஆதார் நிர்வாகம் பயனர்களுக்காக புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, பயனர்கள் தங்கள் ஆதார் சம்பந்தப்பட்ட கடந்த ஆறு மாத தரவுகளை “மை ஆதார் ஆப்” என்ற மொபைல் செயலி மூலம் சரி பார்த்துக் கொள்ளலாம். உங்கள் ஆதார் ஏதேனும் சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தப்பட்டுள்ளதா? தேவையற்ற இடங்களில் உங்கள் ஆதார் எண் வெளியிடப்பட்டிருக்கிறதா? போன்ற பல தகவல்களை இந்த ஆப் மூலம் நீங்கள் கண்டறியலாம்.
பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்(15.11.2022)-முழு விவரம் உள்ளே!
இதுவரை இந்த தகவல் தெரியாத நபர்கள் உடனடியாக, அரசின் அங்கீகரிக்கப்பட்ட இந்த ஆப்பை டவுன்லோட் செய்து, ஆதார் குறித்த விவரங்களை சோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.