மணிப்பூரில் கடந்த இரு மாதங்களாக பழங்குடியின மக்களிடையே தொடர்ந்து போராட்டங்கள் வெடித்துக் கொண்டே தான் இருக்கிறது. இந்த போராட்டத்தால் பல உயிர்கள் இறந்த நிலையில் பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட இரு பெண்களை நிர்வாணமாக ரோட்டில் ஓட விட்டு வீடியோ நெஞ்சையே பதற வைத்தது. இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் அடுத்த அதிர்ச்சி சம்பவம் வெளியாகி உள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது பழங்குடியின பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கான புகைப்படம் வெளியாகியுள்ளது. மேலும் பல பெண்கள் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இப்படி அடுத்தடுத்து வெளிவரும் சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. இதனால் மணிப்பூர் மக்களையும், பெண்களையும் காப்பாற்ற வேண்டும் என்று பல மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது.