இன்றைய காலகட்டத்தில் பாலியல் வன்கொடுமை என்பது சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. சிறுமி முதல் முதியவர் வரை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி வருகின்றனர். இதற்கு தக்க நடவடிக்கை எடுத்தாலும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் கடந்த மாதம் மத்தியப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 15 வயது சிறுமி ஒருவர் ரத்தக்கறை படிந்த ஆடையுடன் 8 கி.மீ தூரம் வரை உதவி கேட்டு நடந்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அந்த சிறுமிக்கு யாரும் உதவ முன்வராத நிலையில், கடைசியாக ஆசிரமத்தில் இருந்த நபர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். இதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து காவல்துறை விசாரணையை தொடங்கியது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி கூறியது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு கூறிய எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை என்றும், மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு சென்ற போது வெறும் 1500 ரூபாய் மட்டும் கொடுத்ததாக கூறி அந்த சிறுமி வேதனை பட்டுள்ளார்.