உச்சத்தில் கோல் இந்தியா: 1 டிரில்லியன் ரூபாய் சந்தை மூலதனம்!!!

0

கோல் இந்தியா நிறுவனத்தின் சந்தை மூலதனமானது தற்போது 1 டிரில்லியன் ரூபாயை எட்டி சாதனை படைத்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ‘கோல் இந்தியா’வும் ஒன்று. நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் பெரும்பாலும் மத்திய அரசு நிறுவனமான கோல் இந்தியா நிறுவனத்தாலேயே மேற்கொள்ளப்படுகிறது. நாட்டில் உள்ள பல்வேறு அனல்மின் நிலையங்களுக்கு கோல் இந்தியா நிறுவனம் நிலக்கரி சப்ளை செய்து வருகிறது. கடந்த 52 வாரங்களில்மும்பை பங்குச் சந்தையில் கோல் இந்தியா நிறுவனத்தின் பங்குகள்  5 சதவீதம் வளர்ச்சியடைந்து 164.65 ஆக உள்ளது.

தற்போது இந்த பொதுத்துறை நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 1 டிரில்லியன் ஆக உள்ளது. சந்தை மூலதனம் எனபது ஒரு நிறுவனத்தின் தற்போதைய பங்கு விலை மற்றும் நிலுவையில் உள்ள மொத்த பங்குகளின் அடிப்படையில் நிறுவனத்தின் மொத்த மதிப்பீடு ஆகும். பொதுவாகவே சந்தை மூலதனம் ஒரு நிறுவனத்தின் நிலுவை பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ஆகும்.

கோல் இந்தியா தவிர இந்தியாவின் பெரிய சந்தை மூலதன நிறுவனங்களில் எச்.டி.எஃப்.சி வங்கி, ஹீரோ மோட்டோகார்ப், பாரதி ஏர்டெல், எஸ்பிஐ வங்கி ஆகியவை உள்ளன.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here