டெட்டால் நிறுவனம், டெட்டால் ஹேண்ட் வாஷ் பேக்குகளில் அந்நிறுவனத்தின் லோகோவிற்கு பதிலாக கொரோனா போராளிகளின் புகைப்படங்களையும் அவர்களை பற்றிய சிறு குறிப்பையும் அச்சிட்டு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
நுகர்பொருள் விற்பனையில் முன்னணி நிறுவனமான ‘டெட்டால்’ தயாரிப்பில், அதன் ‘லோகோ’ படத்துக்கு பதிலாக, கோவிட்போராளிகளின் படங்களை அச்சிட உள்ளது.அவர்களின் படத்தை பிரசுரிப்பதுடன் மட்டுமின்றி, அவர்கள் குறித்த தகவலையும் வெளியிட உள்ளது. இவர்கள் அனைவரும் தொற்று நோய் காலத்தில், எண்ணற்ற மக்களுக்கு உதவியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
‘டெட்டால் சல்யூட்ஸ்’ எனும் இந்த பிரசாரத்தில், ‘டெட்டால் ஹேண்ட் வாஷ்’ பேக்குகளில், நாடு முழுக்க உள்ள கோவிட் போராளிகளில், 100 பேர்களின் கதைகளை அச்சிட உள்ளது. இந்த, ‘டெட்டால் சல்யூட்ஸ்’ பேக்குகள் மின்னணு வர்த்தக நிறுவனங்களின் வாயிலாகவும் மற்றும் நாட்டில் உள்ள, 5 லட்சம் ஸ்டோர்கள் வாயிலாகவும் விற்பனைக்கு வருகிறது.
ஜூன் மூன்றாவது வாரத்திலிருந்து இவை கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. வரலாற்றின் முதல் முறையாக, டெட்டால் நிறுவனம் அதன் லோகோவை நீக்கிவிட்டு, அதற்கு பதில், கொரோனா போராளிகளின் படங்களை அச்சிட உள்ளது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!