உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 3 விதமான வெண்டிலேட்டர்களை உருவாக்கிய இஸ்ரோ அதற்கான தொழில்நுட்பத்தை தொழில் துறைக்கு தருவதாக அறிவித்துள்ளது.
வெண்டிலேட்டர்:
2019ம் ஆண்டின் இறுதியில் துவங்கிய கொரோனா தொற்று அதி தீவிரமாக பரவி மக்களை பாதித்து வருகிறது. முதல் அலை மற்றும் இரண்டாம் அலை என உருமாறி பரவும் கொரோனா பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் காரணமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கொரோனா 3ம் அலை பரவலை தடுக்க தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது தடுப்பூசி போடப்பட்டு வரும் வேலையில் நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது இஸ்ரோ நிறுவனம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மூன்று விதமான வெண்டிலேட்டரை உருவாகியுள்ளது. அதற்கான தொழில் நுட்பத்தை தொழில் துறைக்கு தருவதாக இஸ்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே இது தொடர்பாக தொழிற்சாலைகள் அல்லது தொழில் முனைவோர் ஜூன் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளது.