பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது தற்போது ராதிகா பாக்கியா பார்த்து வைத்த வீட்டிற்கு வர சம்மதிக்கிறார். மேலும் இதனால் செய்வதறியாது தவிக்கிறார் கோபி.
பாக்கியலட்சுமி
பாக்யலக்ஷ்மி சீரியல் தற்போது பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் அடிக்கடி ராதிகாவிற்கும் கோபிக்கும் பல சண்டைகள் வேறு வருகிறது. அந்த டென்ஷனிலேயே வீட்டிற்கு வர பாக்கியலட்சுமி அவருக்காக வாங்கி வைத்திருந்த சட்டையை காட்ட எரிந்து விழுகிறார்.
கோவத்துடனேயே மாடிக்கு செல்கிறார். அடுத்ததாக தான் தேவையில்லாமல் செய்து விட்டோமோ என்று கோபி வேதனையடைகிறார். எந்த கோவம் என்றாலும் அதனை பாக்கியாவிடமா காட்டுவது என்று தன்னை தானே திட்டி கொள்கிறார். மேலும் அந்த சட்டையை போட்டுகொண்டு கீழே வருகிறார்.
இதனால் பாக்கியா மிகவும் அதிர்ச்சியாகிறார். சட்டை மிகவும் அழகாக இருப்பதாகவும், நன்றியும் சொல்கிறார். நாளைக்கு இதனை ஆபீஸிற்கு போட்டு செல்வதாக சொல்கிறார். இதனால் பாக்கியாவிற்கு கால் தரையில் படவில்லை. அடுத்ததாக காலையில் பாக்கியா பேசிக்கொண்டிருக்க அப்பொழுது அந்த சட்டையை போட்டுகொண்டு வருகிறார்.
இதனால் அனைவரும் சந்தோஷமடைகின்றனர். அந்த நேரம் பார்த்து ராதிகா கால் செய்கிறார். தான் அந்த வீட்டையே வாங்கிக்கொள்வதாக சொல்கிறார். இதனால் பாக்கியா சந்தோஷமடைகிறார். இதனை கோபியிடம் சொல்ல கோபி நீங்களும் திருந்த மாட்டீங்க என்று கோவமடைகிறார்.
அடுத்ததாக ராதிகாவிடம் சென்று கத்துகிறார். இதனால் கோவமடையும் மயூ எங்க அம்மாவை தேவையே இல்லாமல் ஏன் கத்துறீங்க என்று சொல்கிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.