கொரோனா சிகிச்சைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதார துறை வழங்கி உள்ளது. மேலும் இதற்கான அரசாணையும் தற்போது சுகாதார துறை வெளியிட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தமிழ் நாட்டில் நேற்று 1,53,264 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 15,766 ஆண்கள், 12,170 பெண்கள் என மொத்தம் 27 ஆயிரத்து 936 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 12 வயதுக்கு உட்பட்ட 897 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 4,210 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர்.
கொரோனா சிகிச்சை – புதிய வழிகாட்டுதல்கள்:
- ஆக்சிஜன் அளவு 94 ஆக இருந்தால் மருத்துவமனைக்கு வராமல் வீடுகளிலேயே தனிமைப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.
- ஆக்சிஜன் அளவு 90 முதல் 94-க்குள் இருந்தால் கொரோனா சிகிச்சை மையங்களில் நோயாளியை அனுமதிக்கலாம்.
- ஆக்சிஜன் அளவு 90-க்கும் குறைவாக இருந்தால் மட்டும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படவேண்டும்.
தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை படி படியாக குறைந்துவருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு சுகாதாரத் துறை சார்பில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!