மதுபானங்களை வீட்டில் டோர் டெலிவரி செய்ய மாநில அரசு உத்தரவு – கொண்டாட்டத்தில் குடிமகன்கள்!!!

0

கொரோனா பெருந்தொற்றினால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் வீடுகளுக்கு மது டெலிவரி செய்ய அனுமதி அளித்துள்ளது டெல்லி அரசு. மகிழ்ச்சியில் மது பிரியர்கள்.

ஊரடங்கிலும் மது:

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கத்திலிருந்து மீள்வது எப்படி என்பது குறித்து தீவிரமான ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஏற்கனவே ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்துவதன் மூலம் மக்களை கூட்டமாக சேராமல் தனிமைபடுத்தலாம் என ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. இந்நிலையில் மக்கள் தங்களது அத்யாவசிய பொருட்களுக்கு கூட வெளியில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.


அண்மையில் கர்நாடக அரசு வீட்டிற்கு தேவையான அனைத்து அத்யாவசிய பெட்களையும் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து டெல்லி அரசு தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதில் கூறியுள்ளதாவது, இந்திய மற்றும் வெளிநாட்டு மதுபானங்களை வீட்டிற்க்கே டெலிவரி செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கு காலத்தில் மது இல்லாமல் ஏங்கி தவித்த மது பிரியர்களுக்கு ஒரே கொண்டாட்டமாக உள்ளது. இருப்பினும் ஊரடங்கில் அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தவிக்கும் நிலையில் மது விற்பனை தேவை தானா என கருத்துக்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here